Saturday 29 March 2014

தக்காளியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும் என்று சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.!! |Tamil 24x7 Posts

தக்காளியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்காமல்
இருக்கும் என்று சமீபத்தில்  மேற்கொள்ளப்பட்ட ஆய்வில்
தெரியவந்துள்ளது. நாம் அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்ளும் தக்காளிப்
பழத்தின் மருத்துவக் குணங்களைப் பற்றி இங்கே அறிந்து கொள்வோம்.




தக்காளியைப் பொதுவாக, சமைக்காமல் பச்சையாகச் சாப்பிடுவதால் இதன்
முழுப்பலனையும் பெற முடிகிறது. அப்படிச் சாப்பிடுவது உடலுக்குப் பலம்
தருகிறது. இன்னும் சொல்லப்போனால், உடல் பலவீனமாக இருக்கிறவர்களுக்கு அது
டானிக் போன்றது.




இதில் வைட்டமின் ஏ- சுமார் 91 மில்லி கிராம் உள்ளது. தவிர வைட்டமின்
பி-1, பி-2, 17 மில்லி கிராமும், வைட்டமின் சி- 9 மில்லி கிராமும்,
சுண்ணாம்புச்சத்து 2 மில்லி கிராமும் அடங்கி உள்ளன.



Continue Reading >>>> 

Friday 28 March 2014

குழந்தைகளுக்கு குளிர்பானம் கொடுக்காதீர்கள், உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை! |Tamil 24x7 Posts

குழந்தைகளுக்கு குளிர்பானம் கொடுக்காதீர்கள், உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!

லண்டன் – ஒரு நாளைக்கு 6 சிறியக் கரண்டிக்குமேல் சர்க்கரை
எடுத்துக்கொள்ளக் கூடாது என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
மேலும் குழந்தைகளுக்கு குளிர்பானம் உள்ளிட்டவற்றை கொடுக்கக் கூடாது
என்றும், அதில் அபாயகரமான அளவில் சர்க்கரை இருப்பதாகவும் அந்நிறுவனம்
கூறியுள்ளது.



Continue Reading >>>>

அடிக்கடி குளிர்பானம் குடிப்பவர்களின் இதயம் பாதிக்கும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது

குளிர்பானம் குடித்தால் இதயம் பாதிக்கும்!

காபி டீ குடிக்கீறார்களோ இல்லையோ குளிர்பானம் குடிப்பவரின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டு வருகிறது. இப்படி அடிக்கடி குளிர்பானம் குடிப்பவர்களின் இதயம் பாதிக்கும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த ஹார்வர்டு பல்கலைக்கழகம், குளிர்பானங்கள் குடிப்பதால் ஏற்படும் விளைவுகள் பற்றி ஆய்வு மேற்கொண்டது. ஆய்விற்கு  ஆண்கள் மட்டுமே உட்படுத்தப்பட்டனர்.

கடந்த 22 ஆண்டுகளாக அமெரிக்கர்கள் 40 ஆயிரம் பேரிடம் இந்த ஆய்வை மேற்கொண்டது. ஆய்வு  அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது, இனிப்பு கலந்த குளிர்பானத்தை  அடிக்கடி குடிப்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு 20 சதவீதமும் அதிகரிக்கிறது.

இதற்குக் காரணம் குளிர்பானத்தில் கலக்கப்படும் சில ரசாயன கலவைகள் தான். குளிர்பானங்களில் பயன்படுத்தப்படும் செயற்கை இனிப்பூட்டும்  பொருள்களால் உடல்நலக்குறைவு ஆபத்து ஏற்பட வாய்ப்பு இல்லை.

மேலும்  தொடர்ச்சியாக குளிர்பானம் பருகி வந்தால் மட்டுமே உடல் எடை  அதிகரித்து, இதயத்துக்கு தீங்கு விளைவிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாள்தோறும் ஒரு குளிர்பானம் பருகும் ஒருவருக்கு புராஸ்டேட் கேன்சர் வருவதற்கான வாய்ப்பு 40 சதவீதம் அதிகரிக்கும் என்று தெரியவந்துள்ளது.
ஆனால் வாரத்தில் இரண்டு நாள் அல்லது அதற்கு குறைவாக குளிர்பானம் எடுத்துக் கொள்ளும் நபர்களுக்கு மாரடைப்பு அபாயம் காணப்படவில்லை.
லண்டன் பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்த ஆய்வு முடிவில், சர்க்கரை அதிகம் கொண்ட காலை நேர உணவு வகைகளை அதிகம்  சாப்பிடுபவர்களுக்கு புரேஸ்டேட் கேன்சர் வரும் வாய்ப்பு 38% அதிகம் என்று ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது.

அதனால் கூல்டிரிங்க்ஸ்  குடிக்கும் பழக்கத்தை கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்தி விடுங்கள் ஏனெனில் கூல்டிரிங்க்ஸ் சாப்பிவதன் மூலம் ஆண்களுக்கு பற்களில் கறை மற்றும்  ஆண் ஊறுப்புகளில் பிரச்சனைகளும் ஏற்பட வாய்ப்ப அதிகம்

உடல் ஆரோக்கியத்துக்கு நெய் நல்லது!

நெய் உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது!

மார்ச் 28 – நோயில்லாதவர்கள் தினமும் உணவில் சுத்தமான நெய் சேர்த்தால், உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.  அதிகமாக நெய் சாப்பிட்டால் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பொதுவாக சொல்வார்கள்.

ஆனால், நோயில்லாதவர்கள் தினமும் உணவில் சுத்தமான நெய் சேர்த்தால், உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இருதய நோய் பாதிப்பு உள்ளவர்களும், உடல் பருமனாக உள்ளவர்களும் நெய் சேர்ப்பது நல்லதல்ல. கொழுப்பை அதிகரித்து அவர்களுக்கு தீங்கு விளைவிக்கும். அவர்கள் நெய்யை உணவில் சேர்க்காமல் ஒதுக்கி விட வேண்டும்.

அதே சமயம், நோய் பாதிப்பு எதுவும் இல்லாதவர்கள் என்றால், அவர்கள் எந்த பயமும் இல்லாமல் தினமும் சுத்தமான நெய்யை உணவில் சேர்த்து கொள்ளலாம்.

தினமும் உணவில் நெய் சேர்ப்பதால் ஏற்படும் பலன்கள் குறித்து அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்று ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டது.
அதன் விவரம் வருமாறு:

1. தினமும் நெய் சேர்ப்பது உடல் நலம் மற்றும் மன நலனுக்கு உகந்தது. இதனால், உடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்.
2. உடலில் உள்ள கெட்டச் சத்துக்களை வெளியேற்றவும், கண் பார்வையை அதிகரிக்கவும், தசைகளை வலுப்படுத்தவும் நெய் உதவுகிறது.
3 .வெண்ணெய்யை விட உருக்கப்பட்ட சுத்தமான நெய்யில் கொழுப்பு குறைவாக உள்ளதால், வேகமாக செரிக்கும்.
4. நெய்யை பிரிட்ஜில் வைக்க வேண்டியதில்லை. அதை கைபடாமல் வெளியில் வைத்திருந்தாலே நீண்ட காலத்துக்கு கெடாது. அதனால், நெய்யில் மாற்றம் ஏற்படாது.
5. நெய் சாப்பிடுவது மூளையின் செயல்பாட்டை ஊக்குவிக்கும். செரிமானத்தை ஊக்குவிப்பதால் நாம் எடுத்து கொள்ளும் உணவில் எடை குறையாமல் சமநிலையில் வைக்க உதவும்.
6. விட்டமின் ஏ, டி, இ, கே ஆகியவை நெய்யில் உள்ளதால் உடலில் ரத்தத்ததை சுத்தப்படுத்தி ரத்த சுழற்சியை மேம்படுத்தும்.
7 .உடல் செயல்பாட்டுக்கு சில கொழுப்பு சத்துகள் தேவை. அதை நெய் சாப்பிடுவதால் பெறலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ரெயில் நிலையத்தில் வங்கி ஊழியர் திருநங்கைகளால் கொலை

பொன்னேரி ஆலாடு சாலையில் வசித்தவர் சீனிவாசன் என்கிற லிங்கம் (வயது 52).  இவர் பழவேற்காடு இந்தியன் வங்கியில் குமாஸ்தாவாக வேலை செய்து வந்தார். சென்னை செல்லும் மின்சார ரெயிலில் 6.40 மணிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது லிங்கத்தை சுற்றி 5 திருநங்கைகள் சூழ்ந்து கொண்டு தகாத வார்த்தைகள் கூறி வெறிச்செயலில் ஈடுபட்டனர்.

பின்னர் மீஞ்சூர் ரெயில் நிலையத்தில் இறங்கிய போது அவரை கீழே தள்ளிய நிலையில் லிங்கத்தின் ஆடையை களைந்து அவரது அடிவயிற்றில் தாக்கினார்கள். இதில் வேதனை தாங்கமுடியாமல் லிங்கம் அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ரெயில்வே போலீசார் விரைந்து சென்றனர். அங்கு உயிருக்கு போராடிய நிலையில் இருந்த லிங்கம் தண்ணீர் கேட்டார். உடனே ரெயில்வே போலீசார் தண்ணீர் கொடுத்த போது திருநங்கைகள் தகாத செயலால் இப்படி நடந்ததாக அவர் போலீசாரிடம் கூறினார். சற்று நேரத்தில் மயக்கம் அடைந்தார். அப்போது அங்கு பதுங்கியிருந்த ஒரு திருநங்கையை போலீசார் கைது செய்தனர்.

போலீசார் வங்கி ஊழியர் லிங்கத்தை மீஞ்சூர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். 

http://www.maalaimalar.com/2014/03/29093855/minjur-railway-station-bank-wo.html
Related Posts Plugin for WordPress, Blogger...